அணியியல் - உவமையணி்

115 

 இருக்கும் ஒளி பொருந்திய முகமா? இப்பொருள் உண்மையில் யாது என்று
 வரையறுக்க இயலாது என்மனம் இரு கூறுபட்டுத் தடுமாற்றமுற்று ஒரு பக்கமும் சாராது
 உள்ளது - என்ற இப்பாடலில், தாமரையோ முகமோ என்னும் ஐயநிலை
 தெளியாமை கூறப்பட்டுள்ளது.

     இதனை ஐயவணி என்ற தனி அணியாகச் சந்திராலோகம் குறிப்பிடும். வடநூலார்
 சந்தேகாலங்காரம் என்பர்.

    "பொய்யறு பொருளையும் பொருவையும் கருதி
     ஐயப் படுவது ஐய உவமை".                          - வீர. உரை. 156 

    "ஐயம் கொண்டன இருபொருள் அறைதல்
     ஐய உவமை ஆகும் என்ப"                            - தொ. வி. 335 

    "ஐயுற்று இருமையும் அறைகுவது ஐய
     உவமை என்மனார் உணர்ந்திசி னோரே".              - மு. வீ. பொ. 13 

தேற்றவுவமை

     இவ்வியல் அதனால் இதுஅன்று இதுஎனச் செவ்விதின் தெளிந்த தேற்ற உவமை
 வருமாறு :

    "தாமரை நாள்மலரும் தண்மதியால் வீறுஅழியும்;
     காமர் மதியும் கறைவிரவும்; - ஆம்இதனால்,
     பொன்னை மயக்கும் பொறிசுணங்கி னாள்முகமே,
     என்னை மயக்கும் இது"

 என வரும்.

     [இதுவோ அதுவோ என்ற தடுமாற்றம் நீங்கி இன்ன காரணத்தால்
 இதுவன்று இதுவே என்று முடிவு செய்வதனைக் கூறுவது தேற்ற உவமை.

     தாமரை மலர் மதியைக் கண்டு கூம்பும் ஆதலானும், அழகிய மதியம் களங்கம்
 உடைத்து ஆதலானும், மதிக்கும் தோலாது