என வரும்.
[உபமானங்களும் உபமேயமும் தம்முள் பகைமை உடையன என்று கூறிப் பின்
அவற்றை ஒப்புமையுடைய பொருளாகச் சொல்லுதல் விரோத உவமையாகும்.
ஒப்பு நோக்கிய அளவிலேயே பகைமை உண்மை பெறப்படுதலின், விரோதத்தின்
கண்ணும் உவமை அமைந்துள்ளது.
இனியீர்! செந்தாமரையும் சந்திரனும் உங்கள் முகமும் தம்மில் பகைமை
உடையவாயினும், அவற்றை ஒன்றை ஒன்று ஒக்கும் என்றும் கூறுவாரும் உளர் -
என்ற இப்பாடலில், உபமானமாகிய தாமரை சந்திரன் என்பனவற்றிற்கும் உபமேய
மாகிய முகத்திற்கும் பகைமை உண்மையை வெளிப்படுத்தி உவமிப்பது இவ்வணியாதல்
காண்க.
"புகழ்பெறு பொருளும் பொருவும் ஒன்றைஒன்று
இகழ்வது விரோதம் என்மனார் புலவர்" - வீர. உரை. 156]