138

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "அடைமறை ஆயஇதழ்ப் போதுபோல் கொண்ட
     குடைநிழல் தோன்றும்நின் செம்மலைக் காணூஉ"              - கலி. 84 

 எனவும், முதற்பொருளோடு சினைப்பொருளும் சினைப் பொருளோடு முதற்பொருளும்
 தம்முள் மயங்க உவமிப் பினும் அவை தத்தம் உவமேயங்களைச சிறப்பித்து
 வந்தமையான் வழுவாகாது இலக்கணமாம் எனவும்,

     [நெருப்பைஒத்த சிறிய கண்களைஉடைய - என்ற தொடரில், நெருப்பாகிய முதல்
 கண்களாகிய சினைக்கு உவமை ஆயிற்று. இலையால் மறைக்கப்பட்ட அழகிய
 இதழ்களை உடைய தாமரை மலர்போலக் குடைநிழலில் காணப்படும்
 நின்மகனைக்கண்டு - என்ற தொடரில், இலை என்ற சினையும் மலர் என்ற சினையும்
 முறையே குடை, சிறுவன் என்ற முதற்பொருள்களுக்கு உவமங்கள் ஆயின.

    "முதலும் சினையும்என்று ஆயிரு பொருட்கும்
     நுதலிய மரபின் உரியவை உரிய"                    - தொல் பொ. 281

 என்பது உவமம்பற்றிய மரபு ஆதலின், உவமத்தின்கண் முதல்வினை பற்றிய
 மயக்கம் கொள்ளப்படும் என்பது.]

     "கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே"              - சீவக. 53 

 எனவும்,

     "மல்லல் மலைஅனைய மாதவரை வைதுஉரைக்கும்"        - சீவக. 2789 

 எனவும், உயர்திணையோடு அஃறிணையும் அஃறிணை யோடு உயர்திணையும்
 மயங்க உவமிப்பினும் அவை தத்தம் உவமேயங்களைச் சிறப்பித்து வத்தமையான்
 வழுவாகாது இலக்கணம்ஆம் எனவும்,

     [நெற்பயிர் கல்வி நிரம்பிய சான்றேர்களைப் போலத் தலைவணங்கிக் காய்த்தது
 என்ற தொடரில், சான்றோராகிய உயர்திணைப்பொருள் நெற்பயிராகிய அஃறிணைப்
 பொருளுக்கு உவமை ஆயிற்று.