என்பது பெருக்கம் பற்றி இளிவரல் பிறந்தது. பிறவும் அன்ன.
[முன்பு செல்வராய் இருந்து பின்னர் மிடிப்பட்டார், தம் துயரைத் துடைத்துக்
கொள்ளும செயற்கண் உளங்கொண்டு, பெரிய செல்வமுடையார் இல்லத்துக்குப்
புறப்பட்டுப் போய் அவரிடம் தம் குறையக்கூற இயலாதாராய், அவர் வீட்டிற்குப்
போதலும் உட்புகுதலும் "பின் யாது சொல்வார்களோ?" என்று மீளுதலும் போல, என்
நெஞ்சு வருதலையும் செல்லுதலையும் போதலையும் செய்கிறது - என்ற இப்பாடற்
பகுதியில் வறுமைப் பெருக்கம், காமப்பெருக்கம் என்ற இவற்றால் ஏற்படும் நலிவால்
பிறரால் இகழப்பட்டு எளிமையுறும் இளிவரல் என்ற மெய்ப்பாடு பிறந்தவாறு.]