ஓட - "செந்தீ ஒட்டிய வெஞ்சுடர்ப் பருதி"
எனவும்,
நிகர்ப்ப - "கண்ணொடு நிகர்க்கும் கழிப்பூங் குவளை"
எனவும் வடிவு பற்றியும் வரும் பண்பு உவமையும்,
அன்ன - "எரிஅகைந்த அன்ன தாமரைப் பழனத்து" - அகநா. 106
எனவும்,
ஆங்கு - "கயம்நாடு யானையின் முகன்அமர்ந் தாங்கு" - அகநா. 6
எனவும்,
மான - "புலவுநுனைப் பகழியும் சிலையும் மானச் செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்" - பெரும். 269, 70
எனவும்,
விற்ப்ப - "புலிவிறப்ப ஒலிதோற்றி"
எனவும்,
என்ன - "புலிஎன்னக் கலிசிறந்து உராஅய்"
எனவும்,
உறழ - "செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை" - திருமுருகு. 5
எனவும்,
தகைய - "பொருகளிற்று எருத்தின் புலித்தகைப் பாய்த்துள்"
எனவும்,
நோக்க - "மான்நோக்கம் நோக்கும் மடநடை ஆயத்தார்"
எனவும் வரும் தொழில் உவமையும்,
எள்ள - "எழிலி வானம் எள்ளினன் தரூஉம் கவிகை வண்கைக் கடுமான் தோன்றல்"
எனவும்,
விழைய - "மழைவிழை தடக்கை வாய்வாள் எழினி"
|
|
|