அணியியல் - உவமையணி்

161 

    "வையம் தகளியா, வார்கடலே நெய்யாக.
     வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
     சுடர்ஆழி யான்அடிக்கே சூட்டுவன் சொல்மாலே,
     இடர்ஆழி நீங்குகவே என்று"

 என வரும்.

     [ஒரே பாடலில் சில உருவகங்களை விரித்தும், சில உருவகங்களைத் தொகுத்தும்
 பாடுவது தொகைவிரி உருவகமாம்.

     உலகத்தை அகலாகவும், கடல்நீரையே நெய்யாகவும், கதிரவனையே
 ஒளிப்பிழம்பாகவும் கொண்டு, இடர்க்கடல் நீங்குக என்று சொல்மாலையை ஆழியான்
 அடிக்கண் சூட்டுவன் - என்ற இப்பாசுரத்தில், வையம் தகளியா - கடலே நெய்யாக-
 சுடரோன் விளக்காக - என்ற விரிஉருவகங்களும், சொல்மாலை - இடர்ஆழி
 என்ற தொகைஉருவகங்களும் அமைந்துள்ளமை காண்க.

    "தொகையும் விரியும் தொக்குடன் கிளப்பது
     தொகைவிரி் என்று சொல்லினர் புலவர்".                - வீ. உரை. 160 

     "தொக்கும் விரிந்தும் நற்பது தொகைவிரி".            - மு. வீ. பொ. 25] 

இயைபுருவகம்

     பலபொருள் உருவகப் படுப்பின் அப்பலவும் இயைவன புணர்க்கும்
 இயைபு உருவகம் வருமாறு:

     "செவ்வாய்த் தளிரும், நகைமுகிழும், கண்மலரும்,
      மைவார் அளக மதுகரமும், - செவ்வி
      உடைத்தாம் திருமுகம்என் உள்ளத்து வைத்தார்,
      துடைத்தாரே அன்றோ துயர்"

 என வரும். இதனுள் தளிர் முதலியன தம்முள் இயைபு உடைமையின் இப்பெயர்த்து
 ஆயிற்று.

     [உருவகம் செய்யப்பட்ட பொருள்கள் பலவும் ஒன்றற்கு ஒன்று இயைபுடையதாக
 அமைப்பது இயைபு உருவகமாம்.

     21-22