162

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 வாய்த்தளிரும், புன்முறுவலாகிய மொட்டும், கண்களாகிய மலரும், கூந்தலாகிய
 வண்டும் ஆகிய இவற்றை அழகிய முகத்துக் கொண்ட தலைவி என் மனத்துயரைத
 தீர்த்தாள் - என்ற இப்பாடலில், தளிர், மொட்டு, மலர், வண்டு என்று
 ஒன்றோடொன்று இயைபுடைய பொருள்கள் உருவகம் செய்யப்பட்டமை இயைபு
 உருவகமாகும்.

    "அசைவில் கருவி யவற்றால் தொழிலில்
     இசையும் என்பது இயைபுஉரு வகமே".                  - வீ. உரை. 160 

    "உருவகம் பலபொரு ளையும்உஞற் றுங்கால்
     தம்முள் இயைபுடைத் தாக உருவகம்
     செய்வது இயைபுஎனச் செப்பினர் புலவர்".            - மு. வீ. பொ. 26] 

இயைபிலுருவகம்

 வேட்டன உருவகம் வேறுவேறு இயற்றி ஈட்டுதல் புரிந்த இயைபுஇல் உருவகம்
 வருமாறு :

    "தேன்நக்கு அலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே
     கூனல் பவளக் கொடியாகத் - தானம்
     மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்,
     புழையார் தடக்கைப் பொருப்பு"

 என வரும்.

     [உருவகம் செய்யப்பட்ட பொருள்கள் ஒன்றோடொன்று பொருள்இயைபு
 இல்லையாம்படி அமைப்பது இயைபுஇல் உருவகமாகும்.

     துதிக்கையை உடைய யானைனயாகிய மலை (விநாயகர்) கொன்றைமலர்
 பொன்னாகவும், சிவந்த சடையே பலளக்கொடியாகவும், மதநீர் மழையாகவும்,
 கொம்பு பிறைமதியாகவும் காட்சி வழங்குகிறது - என்ற இப்பாடலில், உருவகம்
 செய்யப்பட்ட பொன், பவளக்கொடி, மழை, பிறை, மலை என்ற இவற்றினிடையே
 பொருள் இயைபு இன்மை காணப்படுகிறது.