வருந்தாதே" - என்று கூறிய இப்பாடலில், கொங்கையைக் குவடாக உருவகம் செய்து
மீண்டும் யானையாக உருவகம் செய்ததும், தோள்களைக் குன்றாக உருவகம், செய்து
மீண்டும் கட்டுத்தறியாக உருவகம் செய்ததும் உருவகஉருவகம் ஆதல் காண்க.
"உருவகம் தன்னை உருவகம் செய்வது
உருவக உருவகம் என்மனார் புலவர்." - வீ. உரை. 161
"ஒருபொருள் உருவகம் செய்துமற்று அப்பொருள்
மீட்டும் உருவகம் செய்வது உருவக
உருவகம் என்மனார் உணர்ந்திசி னேரே." - மு. வீ. பொ. 29]