174

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 கிளி, நடையால் அன்னம், தோற்றத்தால் சந்திரன், சாயலால் மயில்" - என்ற
 தலைவன் தலைவியைப் புகழ்ந்த இப்பாடலில், அவனைக் கிளியாகவும்,
 அன்னமாகவும், சந்திரனாகவும், மயிலாகவும், மானாகவும் உருவகம் செய்ததற்குக்
 காரணங்கள் கூறப்பட்டவாறு காண்க.

    "மரபுடைப் பொருளைமற்று அதுவால் அதுஎனும்
     உரைபெறின் ஏதுஉரு வகமாம் என்ப".                 - வீ. உரை. 160] 

     வேற்றுமை உருவகம் வருமாறு:

    "வையம் புரக்குமால், மன்னவ! நின் கைக்காரும்,
     பொய்இன்றி வானில் பொழிகாரும்; - கையாம்
     இதுகார்க்கும் இல்லை பருவம்; இடிக்கும் ஒருகார்ப்
     பருவம் உண்டு"

 என வரும்.

     [உருவகம் செய்யப்பட்ட பொருளை, உருவக உறுப்பாகிய உவமையிலிருந்து
 வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை உருவகமாம். அரசே! உன் கைகளாகிய
 கார்மேகமும் மழைபொழியும் கார்மேகமும் உலகத்தைக் காக்கும் எனினும், உன்
 இரு கைகளாகிய மேகத்திற்குப் பருவ வரையறை இல்லை; ஆனால் இடித்து
 மழைபொழியும் கார்மேகத்திற்கு மழைபெய்யும் பருவம் உண்டு - என்னும்
 இப்பாடலில், கைகளைக் கார்மேகமாக உருவகம் செய்து, பருவ வரையறை இன்மை
 கூறி வேறு படுத்தவாறு காண்க.இது விதிரேக உருவகம் எனவும் பெயர் பெறும்.

    "ஏற்றிய பொருள்கள் இரண்டினும் இயல்பாம
     வேற்றுமை கூறுவது விதிரே கம்மே".                   - வீ. உரை. 161] 

     விலக்கு உருவகம் வருமாறு:

    "வல்லி வதன மதிக்கு மதித்தன்மை
     இல்லை; உளதேல், இரவுஅன்றி, -எல்லை