புலவரையும் குறிக்கும் நிலையில் அமைந்துள்ள வில் ஏர் உழவர், சொல் ஏர் உழவர் என்பன ஏது உருவகத்தின்பாற் படுத்தப்பட்டன.]
"மலையில் பயிலா மடமஞ்ஞை, வாரி
அலையில் பிறவா அமுதம், - விலையிட்டு
அளவாத நித்திலம், ஆராத தேறல்,
வளவாள் மதர்நெடுங்கண் மான்"
என்பது விலக்குஉருவகத்தின்பாற்படும் எனவும்,
[உருவகம் செய்து உருவகம் செய்யப்பட்ட உவமையின் பண்பினை அடியோடு விலக்காமல் அதன் பண்புகளுள் ஒன்றனையே விலக்கி உரைப்பது நேரே விலக்கு உருவகம் ஆகாது, விலக்கு உருவகத்தின் பாற்படும். இம்மதர் நெடுங்கண் மான்போல்வாள் மலையில் பயிலாத மயில்; கடலில் பிறவா அமுதம், விலையிட முடியாத முத்து, உண்ணத் தெவிட்டாத தேன் - என்னும் இப்பாடலில், தலைவிக்கு மயில் அமுதம் முத்து தேன் என்பனவற்றின் தன்மை முழுதும் இருத்தலை உருவகம் செய்து முறையே மயிலுக்குரிய மலையிலிருத்தல், அமுதத்திற்குரிய கடலில் பிறத்தல், முத்துக்குரிய விலை மதிப்பிடப்படல், தேனுக்குரிய உண்ணத் தெவிட்டல் ஆகிய ஒருபுடைப் பண்புகளையே விலக்கியுள்ளமை காண்க.]
"முத்துக் கோத்தன்ன முறுவல், முறுவலே
ஒத்துஅரும்பு முல்லைக் கொடிமருங்குல், - மற்றுஅதன்மேல்
விண்அளிக்கும் கார்போல் விரைக்கூந்தல், மெல்லியலார்
தண்ணளிக்கும் உண்டோ தரம்?"
என்னும் இப்வொப்புமைஉவமை விகாரஉவமத்தின் பாற்படும் எனவும்,
[கூறுபடும் உவமையின் கொள்கை பிறிதாக வேறுபடுத்து இசைப்பது விகார உவமையாம். முதலில் உபமேயமாகக் |
|
|