பாரி ஒருவனும் அல்லன் ;
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப்பதுமே". - புறநா. 107
என்பது விலக்குஉவமையின்பாற்படும் எனவும அமைத்துக்கொள்க. இன்னும் பிறவாற்றான் வருவன உளவேல், அவற்றையும் அமையுமாறு அறிந்து அமைத்துக்கொள்க.
[பாரி பாரி என்று ஒருவனையே உலகத்தவர் பலவாகப் புகழ்கின்றனர். உலகத்தை பாரி மாத்திரம் புரப்பவன் அல்லன். உலகினை மாரியும் காக்கின்றது - என்னும் இப்பாடலில், புலவர் போற்றுதல் பாரி ஒருவனுக்கே அடாது, மாரிக்கும் வேண்டும் என்ற கருத்து, புலவர் போற்றுதலுக்குப் பாரியை அடியோடு விலக்காது மாரியையும் இணைத்தலின், இது நேரே விலக்குவமை ஆகாது விலக்குவமையின் பாற்பட்டது.]
"அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே." - தொல். பொ. 311
என்ப ஆகலின், இவற்றுள் ஒப்புஉவமை,
"முத்துக் கோத்தன்ன முறுவல், முறுவலே
என உவமைக்கு உவமையாய் அடுக்கிவருதல் வரையப்படும் எனின், படாது;
"வெண்திங்கள் போன்றுஉளது வெண்சங்கம்,வெண்சங்கின்
வண்டுஇயங்கு தாழை வளர்தோடு"
எனறாற்போலாது பயப்பாடு உண்மையின் என்பது.
[ஒன்றனை முதலில் உபமேயமாக்கிப் பின்னர் அதனையே உபமானமாக்கிச் செல்வதால் மயக்கம் ஏற்படுதலின் அந்நெறி கூடாது என விலக்கப்பட்டது. ஆனால் நிறம் பற்றி முத்தினுக்கு உபமேயமாகிய பற்களை வடிவு பற்றி முல்லை மொட்டுக்களுக்கு உவமையாக்குதல் பொருட் சிறப்புடைமையின் ஏற்கும் என்று கொள்ளப்பட்டது. |
|
|