"தொழில்குணம் சாதி பொருள்எனும் இவற்றோடு
மொழிபுணர் செய்யுளின் முதலிடை கடைநின்று
ஆங்கதன் பலபுடை அடைபொருள் விளக்கும்
பாங்குறு தீபகம் பன்னிரு பாற்றே." - மா.160
"குணம்தொழில் ஆக்கம் குலம்குறித்து ஒருசொல்
ஒருவயின் நின்று பலவயின் பொருள்தரின்
தீவகம் மூவிடத்து இயலும் என்ப." - மு. வீ. பொ. 61
"வருணியா வருணியம் வாய்ப்பஓர இயல்பின்
முடிவது விளக்கென மொழிந்தனர் புலவர்." -ச. 37
"வினைமுதற் சேற்ற வினைகளை முறைப்பட்
விளம்ப வினைமுதல் விளக்கணி யாமே." -ச. 82
"உன்னும் புனைவுளிக் கும்புனை வில்லிக்கு மோர்தருமத்
தின்முடி வாதல் விளக்கணி - குவ. 37