பூமாலையிலுள்ள மலர்களாகிய அம்புகளைத் தொடுப்பான் - என்ற இப்பாடலில், மால், மாலை என்ற சொற்கள் பலவிடத்தும் பலபொருளில்வந்தவாறு காண்க.]
பொருள் பின்வருநிலைஅணி வருமாறு;
"அவிழ்ந்தன தோன்றி, அலர்ந்தன காயா,
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை, - மகிழ்ந்துடன்
விண்டன கொன்றை, விரிந்த கருவிளை,
கொண்டன காந்தள் குலை"
என வரும். இது பொருள் பின்வருநிலை; என்னை? இவ்வனைத்தும் மலர்தல் பொருள் ஆகலின்.
[தோன்றி மலர்கள் பூத்தன; காயாம்பூக்கள் மலர்ந்தன; முல்லையின் போதுகள் அலர்ந்தன; கொன்றைகள் மகிழ்வோடு இதழ் விரிந்தன; கருவிளைப் பூக்கள் விரிந்தன; காந்தள் குலைகளை எடுத்தன - என்ற இப்பாடலில்,
அவிழ்ந்தன, அவர்ந்தன, முகை நெகிழ்ந்தன, இதழ் விண்டன, விர்ந்த, குலை கொண்டன - என்ற சொற்கள் யாவும் பூத்தன என்ற ஒரே பொருளைக் குறிக்க வந்துள்ளமை காண்க.]
வது என்னாது "வரும் எனின்" என்ற மிகையானே முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பலவயின் ஒருங்கு வருமாயின், அது சொற்பொருட்பின் வருநிலை அணி என்ப் பெயர் பெருதலும் கொள்க.
வரலாறு:
"வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுஉணரார்,
வைகலும் வைகலை வைகும்என்று அன்புறுவார்,
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்,
வைகலை, வைத்துணரா தார்"
|
|
|