என வரும்.
[கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த திருமாலே !
நீ ஊழிக்காலத்தில் ஏழு உலகத்தையும் உன் வயிற்றுள் அடககிக் குழந்தை
வடிவாய் ஆலிலேயில் துயின்றாய் என்று கூறப்படும் கூற்று உண்மை என்று
சான்றோர் கூறுவர். நீ தங்கியிருந்த ஆலிலேயானது கடலிலுள்ளே இருந்ததோ?
விண்ணுலகில் இருந்ததோ? சொல்லுவாயாக.
இறைவனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் நம்மனோர்
பௌதிகமாகிய அறிவுநிலைக்கு எட்டாது ஆதலின், அஃது ஆராயப்படாது
என்று ஆராய்ச்சியை விலக்கியவாறு காண்க. இஃது இறந்தகாலத்து நிகழ்ச்சியாதலும்
காண்க.
மாறன் அலங்கார எடுத்துக்காட்டும் இவ்விளக்கத்தையே உட்கொண்டிருக்கிறது.
- மாறன் 220]