என்ற இப்பாடலில், எதிர்காலத்தில் நிகழக் கூடிய செயல்களைக் கூறித் தலைவன் செலவைத் தோழி விலக்கியவாறு காண்க.]
பொருள் விலக்கு வருமாறு:
"கண்ணும் மனனும் கவர்ந்தவள் ஆடுஇடம் என்று,
அண்ணல் அருளும் அடையாளம், - தண்நிழலின்
சுற்றுஎல்லை கொண்டுஉலவும் சோதித் திரள்அல்லால்,
மற்றுஇல்லை காணும் வடிவு"
என வரும். "அடையாளத் தண்ணிழல்" அடையாளந் தண்ணிழல் என மெலிந்து நின்றது.
[தன் கண்களையும் மனத்தையும் கவர்ந்த தலைவி விளையாடும் இடம் என்று தலைவன் குறிப்பிட்ட அடையாளப்படி குளிர்ந்த நிழலை உடைய சூழலிடத்தைக் கைக்கொண்டு உலவித் திரியும் ஒரு பேரொளி வடிவமே காணப்படுகின்றதே அன்றி உறுப்பு வடிவம் ஒன்றும் காணப்படுவதாயில்லை - என்று தலைவன் கூறிய குறியிடம் சென்று தலைவியைக் கண்ணுற்ற பாங்கன் வியந்து கூறிய இப்பாடலில், ஒளியே அன்றி உருவமே புலப்பட்டிலது என்று பொருள் விலககப்பட்டவாறு.]
குண விலக்கு வருமாறு:
"மாதர் துவர் இதழ்வாய் வந்துஎன் உயிர்வரும்;
சீத முறுவல் செயல்அழிக்கும்; - மீதுஉலவி
நீண்ட மதர்விழிஎன் நெஞ்சம் கிழித்துஉலவும்;
யாண்டையதோ மென்மை இவர்க்கு?"
என வரும்.
[இப்பெண்ணின் சிவந்த இதழ்களை உடைய வாய் என் உயிரைக் கவர்கிறது; குளிர்ந்த புன்முறுவல் என்ன ஆற்றலை அழிக்கின்றது; காதளவும் உலவி நீண்ட இவள் செழித்த விழிகள் என் உள்ளத்தைக் கிழித்து உலவுகின்றன. மெல்லியலாள் என்ற பெயருக்கு ஏற்ப இவளிடத்து மென்மை எங்குக் காணப் |
|
|
|