216

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

     ஐயவிலக்கு வருமாறு:

     ‘மின்னோ; பொழிலின் விளையாடும் இவ்வுருவம்
     பொன்னோ எனும்சுணங்கின் பொற்கோடியோ?-என்னோ?
     திசைஉலவும் கண்ணும், திரள்முலையும், தோளும்,
     மிசைஇருளும் தாங்குமோ மின்?’

என வரும்.

     [‘சோலையினிடத்து விளையாடும் இவ்வுருவம் மின்னலோ? அல்லால் பொன்
போன்ற தேமலை உடைய பொற்கொடியோ? யாதாகும்? எண்டிசையும் உலாவும்
கண்களையும் திரண்ட முலைகளையும் தோள்களையும் மேலே இருண்ட கூந்தலையும்
மின்னல் தாங்கி இருக்குமோ?’-

     என்று தலைவன் கூட்டிய இயல் இடங்கண்டு வியந்த பாங்கன் கூற்றில், மின்னோ
பொற்கொடியோ என்ற ஐயம் கண், முலை, தோள், கூந்தல் என்பனவற்றால்
விலக்கப்பட்டவாறு.]

     [வேற்றுப்பொருள்விலக்கு வருமாறு:

    ‘தண்கவிகை யால்உலகம் தாங்கும் சயதுங்கன்
    வெண்கவிகைக் குள்அடங்கா வேந்துஇல்லை - உண்டோ
    மதியத் துடன்இரவி வந்துஉலவு வானில்,
    பொதியப் படாத பொருள்?’

என வரும்.

     [குளிர்ந்த  வெண்  கொற்றக்குடையின்  நிழலால்  உலகத்தை   நலிவிலிருந்து
பாதுகாக்கும்  சோழ  மன்னனுடைய  வெண்குடைக்குள்  அடங்காத அரசே இல்லை.
சந்திரனும் சூரியனும் உலவும் வானத்தின்கண் அடக்கப்படாத பொருள் எதுவும் இல்லை.

     ‘மதியத்துடன்...பொருள்’    என்ற    பொதுப்    பொருளைக்   கொண்டு
‘தண்கவிகை...இல்லை’ என்ற சிறப்புப் பொருளை