220

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "வேற்றுப்பொருள் வைப்பே விளங்கினது தொடங்கி
     ஈற்றின் உதவிய ஏற்றி உரைத்தலே."                    - தொ, வி. 342 

    "ஆதியில் ஒருபொருள் ஆரம் பித்தது
     முடித்தற்குப்பின்ஒருசொல் மொழிவது
     வேற்றுப்பொருள்வைப் பாமென மொழிய."               - மு,வீ.பொ. 64 

    "மாறு படும்பொருள் வைத்து முடிப்பது
     முரணிற் றோன்றலாம் மொழியுங்காலே."                 - மு,வீ.பொ. 65 

    "பொருந்தாப் பொருளைப் பொருந்த வைப்பது
     பொருந்தாப் பிறபொருள் வைப்பெனப் படுமே.."          - மு,வீ.பொ. 66 

    "கூடும் பொருளைக் கூட்டி உரைப்பது
     கூடும் இயற்கையாம் குறிக்கும் காலே."                  - மு,வீ.பொ. 67 

    "இருமையும் இயைவன இருமை இயற்கை."                 - மு,வீ.பொ. 68 

    "பொதுவால் சிறப்பும் சிறப்பால் பொதுவும்
     புகறல் வேற்றுப் பொருள்வைப் பணியே."                      - ச. 87 

    "பொதுவால் சிறப்பைச் சிறப்பால் பொவினைப் பூரித்திடல்
     அதின்நாமம் ஓர்ந்திடில் வேற்றுப் பொருள்வைப்பணி"          -குவ. 61 

     முழுதும் சேறல் வருமாறு :

    "புறந்தந்து இருள்இரியப் பொன்நேமி உய்த்துச்
     சிறந்த ஒளிவளர்க்கும் தேரோன் - மறைந்தான்;
     புறஆழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
     இறவாது வாழ்கின்றார் யார்?"

 என வரும்

     [இருளைப் புறங்காட்டி ஓடச்செய்து அழகிய சக்கரத்தைச் செலுத்திச்
 சிறந்த ஒளியைப் பரப்பும் கதிரவன் மறைந்தான். புறத்தே கடலால் சூழப்பட்ட
 இவ்வுலகில் இறவாது என்றும் நிலைத்திருப்பவர் யாவர்? -

     என்ற இப்பாடலில், "புறவாழி .... யார்" என்பது பொதுப் பொருள்; "புறந்தது....
 மறைந்தான்" - என்பது சிறப்புப் பொருள். பொதுப்பொருளால் சிறப்புப்பொருள்
 விளக்கப்  பட்டவாறு, பிறந்தவர் இறத்தல் உலகம் முழுதிற்கும் பொதுப் பண்பு
 ஆதலின், இது முழுதும் சேறல் ஆயிற்று.