| 
				
					| 
						| 
    "வேற்றுப்பொருள் வைப்பே விளங்கினது தொடங்கிஈற்றின் உதவிய ஏற்றி உரைத்தலே."                    - தொ, வி. 342
 
    "ஆதியில் ஒருபொருள் ஆரம் பித்ததுமுடித்தற்குப்பின்ஒருசொல் மொழிவது
 வேற்றுப்பொருள்வைப் பாமென மொழிய."               - மு,வீ.பொ. 64
 
    "மாறு படும்பொருள் வைத்து முடிப்பதுமுரணிற் றோன்றலாம் மொழியுங்காலே."                 - மு,வீ.பொ. 65
 
    "பொருந்தாப் பொருளைப் பொருந்த வைப்பதுபொருந்தாப் பிறபொருள் வைப்பெனப் படுமே.."          - மு,வீ.பொ. 66
 
    "கூடும் பொருளைக் கூட்டி உரைப்பதுகூடும் இயற்கையாம் குறிக்கும் காலே."                  - மு,வீ.பொ. 67
 
    "இருமையும் இயைவன இருமை இயற்கை."                 - மு,வீ.பொ. 68  
    "பொதுவால் சிறப்பும் சிறப்பால் பொதுவும்புகறல் வேற்றுப் பொருள்வைப் பணியே."                      - ச. 87
 
    "பொதுவால் சிறப்பைச் சிறப்பால் பொவினைப் பூரித்திடல்அதின்நாமம் ஓர்ந்திடில் வேற்றுப் பொருள்வைப்பணி"          -குவ. 61
 
     முழுதும் சேறல் வருமாறு : 
    "புறந்தந்து இருள்இரியப் பொன்நேமி உய்த்துச்சிறந்த ஒளிவளர்க்கும் தேரோன் - மறைந்தான்;
 புறஆழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
 இறவாது வாழ்கின்றார் யார்?"
  என வரும்      [இருளைப் புறங்காட்டி ஓடச்செய்து அழகிய சக்கரத்தைச் செலுத்திச்என்ற இப்பாடலில், "புறவாழி .... யார்" என்பது பொதுப் பொருள்; "புறந்தது....சிறந்த ஒளியைப் பரப்பும் கதிரவன் மறைந்தான். புறத்தே கடலால் சூழப்பட்ட
 இவ்வுலகில் இறவாது என்றும் நிலைத்திருப்பவர் யாவர்? -
 மறைந்தான்" - என்பது சிறப்புப் பொருள். பொதுப்பொருளால் சிறப்புப்பொருள்
 விளக்கப்  பட்டவாறு, பிறந்தவர் இறத்தல் உலகம் முழுதிற்கும் பொதுப் பண்பு
 ஆதலின், இது முழுதும் சேறல் ஆயிற்று.
 | 
 |  |