முழுவதும் சேறல் - சொல்லப்படும் ஒரு பொதுச் செய்தி உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் குறைவறப் பொருந்தும் பொதுச் செய்தியாக அமைதல்.]
ஒருவச்சேறல் வருமாறு:
"எண்ணும் பயன்தூக்காது, யார்க்கும் வரையாது,
மண்உலகில் வாமன் அருள்வளர்க்கும்; - தண்நறுந்தேன்
பூத்துஅளிக்கும் தாரோய்! புகழாளர்க்கு, எவ்வுயிரும்
காத்துஅளிக்கை அன்றோ கடன்?"
என வரும்.
[குளிர்ந்த நறிய தேனை மலர்ந்து கொடுக்கும் மாலையை அணிந்தவனே! கைம்மாறு கருதாமல், "அருள் செய்யத்தக்கவர் இவரே" என்று சிலரை வரையறுதத்துக்கொள்ளாமல், இவ்வுலகில் திருமால் கருணையை வளர்க்கின்றான். உண்மையான புகழை உடையவருக்கு எல்லா உயிர்களையும் பாதுகாத்துக் கருணை செய்வதன்றோ கடமையாகும்? - இப்பாடலில், "புகழாளர்க்கு........கடன்"- பொதுச் செய்தி; "எண்ணும் ........வளர்க்கும்" - சிறப்புச்செய்தி. பொதுச் செய்தியால் சிறப்புச் செய்தி விளக்கப்பட்டவாறு. இச்செய்தி உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் செல்லாது, புகழாளர் ஆகிய ஒரு கூற்றிற்கே சேறலின் ஒருவழிச் சேறல். ஒருவழிச் சேறல் - சொல்லப்படும் ஒரு பொதுச் செய்தி உலகத்துப் பொருள் அனைத்திற்கும் உரியதாகாது, ஒரு கூற்றிற்கே உரியதாக அமைவது.]முரணித்தோன்றல் வருமாறு:
"வெய்ய குரல்தோன்றி, வெஞ்சினஏறு உட்கொளினும்,
பெய்யும் மழைமுகிலைப் பேணுவரால்; - வையத்து,
இருள்பொழியும் குற்றம் பலவரினும், யார்க்கும்
பொருள்பொழிவார் மேற்றே புகழ்"
|
|
|