அணியியல் - வேற்றுப்பொருள் வைப்பணி

225 

     விபரீதப்படுதல் வருமாறு.

    "தலைஇழந்தான் எவ்வுயிரும் தந்தான், பிதாவைக்
     கொலைபுரிந்தான் குற்றம் கடிந்தான்; - உலகில்,
     தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேல் தப்பாம்
     வினையும் விபரீத மாம்"

 என வரும்.                                                         (32) 

     [ எல்லா உயிர்களையும் படைத்த பிரமன் சிவபெருமான் உகிரி னால் தலை
 தகர்க்கப்பட்டான். தந்தையாகிய எச்சதத்தன் காலை வெட்டிய சண்டீசன் தன் குற்றம்
 களையப்பட்டு உயர்ந்த சிறப்பை அடைந்தான். உலகில் மிக மேம்பட்டவர்கள்
 நினைத்தால், நல்வினை தீவினைகளின் பயனும் மாறுபட்டுவிடும். -

     என்ற இப்பாடலில், 'உலகில் .......... விபரீதமாம்' என்ற பொதுப்பொருளால்,
 'தலை இழந்தான் ............ கடிந்தான்' என்ற சிறப்பொருள் விளக்கப்பட்டவாறு.

     நன்மை செய்தவன் தீயபயனையும், தீமை செய்தவன் நல்ல பயனையும் பெறுதல்
 விபரீதப்படுதலாம்.

    "தம்முன்நிலை விட்டான் தனிமகுடம் சூடினான்
     அம்முன்நிலை நின்றான் அரசிழந்தான் - தெம்முனையில்
     என்றால் இருவினையும் எங்களிரா மன்நினைந்த(து)
     ஓன்றா விபரீத மாம்"

     விடான் - வீடணன்; நின்றான் - கும்பகருணன். னுன்பது மாறன் அலங்கார
 எடுத்துக்காட்டு. - மா. 20732

வேற்றுமையணி - இலக்கணமும் திறனும்

 652. கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
     வேற்றுமைப் படவரின் வேற்றுமை; அதுவே
     குணம்பொருள் சாதி தொழிலொடு புணரும்.

     இது, நிறுத்த முறையானே வேற்றுமை என்னும் அலங்காரத்தின் பொது
 இலக்கணமும் அதன் திறனும் கூறுகின்றது.

      29-30