226

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இ-ள் : கூற்றினான் ஆதல் குறிப்பினான் ஆதல் ஒப்புமை உடையவாய்
 இருப்பன இரண்டுபொருள் தம்முள் வேறுபாடு தோன்ற வந்தால், அது வேற்றுமை
 என்னும் அலங்காரமாம்; அவ்வேறுபாடு குணம் முதலியவற்றால் கூடும் என்றவாறு.

     "வேற்றுமைப்படவரின்" எனப் பொதுப்படக் கூறிய அதனால், அவை ஒரு
 பொருளானே வேற்றுமை செய்தலும் இருபொருளானே வேற்றுமை செய்தலும்
 அவ்வாறின்றி மிகுதிகுறைவுகளான் வேற்றுமை செய்தலும் கொள்க.

   [கூற்று - வெளிப்படை; குறிப்பு - மறைவாகத் தெரிவித்தல்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 46, 47

    "ஒருமை இருமை சிலேடை உயர்பினொ டேதுவன்றிப்
     பெருமை மலிசாதி ஒப்பாம் விதிரேகம் பேசுதொழில்
     அருமை மலிகுணம் சாதியென் றாகுமவ் வேதுவுமற்று
     இருமை நிகழ்ஞா பகங்கா ரகமாம் இலங்கிழையே."              -வீ. 165 

    "ஒருபுடை இருபொருள் உரையினும் குறிப்பினும்
     வெளிப்பட வேற்றுமைப் படுத்துதல் வேற்றுமை."               - மா. 30 

    "அதுவே,ஒருபொருள் இருபொருள் சமம்உயர்ச் சியதெனும்
     பொருள்பெறு மரபின் புலப்படும் என்ப."                     - மா. 131 

    "அதுவே,
     பொருளா தியவாம் நான்கொடும் புணரும்"                    -மா, 132 

    "வேற்றுமை என்பமும் ஆற்றிய இருபொருள்
     சாற்றிய உவமையில் வேற்றுமைப் படுத்தலே."             -தொ. வி. 343