அணியியல் - வேற்றுமையணி

227 

    "உரைப்பினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
     வேற்றுமைப் படவரின் வேற்றுமை ஆகும்."            - மு. வீ. பொ. 69 

    "பொருள்வேற் றுமைப்படல் பொருள்வேற் றுமையே."    - மு. வீ. பொ. 70 

    "சாதிவேற் றுமைப்படல் சாதி ஆகும்."                 - மு. வீ. பொ. 71 

    "குணவேற் றுமைப்படு வதுகுண மாகம்."                - மு. வீ. பொ. 72 

    "முயற்சியால் வேறு படுவது முயற்சி
     வேற்றுமை என்மனார் மெய்உணர்ந் தோரே."          - மு. வீ. பொ. 73 

    "இருபொருள் புணர்ந்தவற் றியல்பெடுத் துரைப்பில்
     ஏய்ப்பினும் உயரினும் இருபொருள் வேற்றுமை."        - மு. வீ. பொ. 74 

    "வருபொருள் ஒதுங்கிவேற் றுமைப்பட வருவது
     விலக்குவேற் றுமையென விளம்பப் படுமே."            - மு. வீ. பொ. 75 

    "ஓதிய பொருள்களின் ஒன்றுஉயர் வுடைத்தென்று
     அறைவது வேற்றுமை அணியெனப் படுமே."                    - ச. 45 

    "ஒப்பாம் மொழியுவ மானோவ மேயத்தின் ஒன்றினைப்பே
     திப்பாம் எனில்அது வேற்றுமை."                             - குவ.46 

     ஒருபொருளான் வேற்றுமை செய்தது வருமாறு:

    "அனைத்துஉலகும் சூழ்போய், அரும்பொருள் கைக்கொண்டு,
     இனைத்துஅளவை என்றற்கு அரிதாம், - பனிக்கடல்;
     மன்னவ! நின் சேனைபோல்; மற்றுஅது நீர்வடிவிற்று
     என்னும் இதுஒன்றே வேறு"

 என வரும். இது கூற்று.

     [மன்னவனே! குளிர்ந்த கடலும் நின் சேனையும் ஒரே வகையான
 குணந்தொழில்களை உடையன, கடல், உலகம் முழுதையும் சூழ்ந்து, பல அரிய
 பொருள்களைத் தன்னகத்து அடக்கி, இவ்வளவு அளவுடையது என்று அளக்க
 உண்ணாததாய் உள்ளது; உன் சேனையும் உலகிலுள்ள பல நாடுகளையும்
 கைப்பற்றுதற்கு உலகம் முழுதையும் சூழ்ந்து, பகைவர் நாட்டின் அரிய
 பொருள்களைக் கொள்ளையிட்டுக் கவர்ந்து, இவ்வளவிற்று