[உலகத்தார் குறிப்பிடும் காரணத்தை விடுத்துக் கவிதன் கற்பனையால்
விசேடமாக எண்ணிச் சொல்வது விபாவனையாம். குறிப்பினால் ஆராய்ந்து
காரணத்தை உணருமாறு அமைப்பது சிறப்புடைத்து. இஃது பிறிதாராய்ச்சியணி
எனவும் கூறப்பெறும்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் தண்டி -
51
"பாவும் விபாவனை பல்லோர் அறியும் பரிசொழித்து
மேவும் இயல்பு குறிப்பேது நீங்கி விளைவுரையாம்." - வீ. 166
"மேதக உலகம் விளம்பிய காரணத்து
ஆதலை விலக்குபு அயல்ஒரு நெறித்தாம்
ஏதுவில் தன்மையில் குறிப்பின்எய் தியமரபு
ஓதுதல் விபாவனை எனஉரைத் தனரே." - மா. 209
"வினைஎதிர் மறுத்துப் பொருள்புலப் படுத்தலும்
நினைவுறு பொதுவகை யானிபம் விலக்கிக்
காரியம் புலப்படுத் தலும்எனக் கழறின்
ஓரிரண் டாகும் உயர்குறிப் பினவே." - மா. 210
"விபாவனை என்ப விளங்கிய உலக
சுபாவனை அலத்திறம் தோற்றி இயல்பலே." - தொ. வி. 358
"ஒன்றன் வினையறிந் துரைக்கும் காலை
உலகறி காரணம் ஒழித்துப் பிறிதொரு
காரணம் இயல்பினும் குறிப்பினும் புலப்படல்
விபாவனை என்மனார் மெய்யுணர்ந்த தோரே." - மு. வீ. பொ. 76
"உலகறி காரணம் ஒன்று மின்றிக்
காரியம் பிறத்தலும் காரணஇயல் தொடர்பு
இரண்டிலொன் றெஞ்சி இருப்பக் காரியம்
பிறத்தலும் காரியம் பிறத்தற் காந்தடை
உள்ள தாக அதுதான் உதித்தலும்
காரணம் அல்லா மற்றொரு கருத்தால்