அணியியல் - விபாவனையணி

235 

     [உலகத்தார் குறிப்பிடும் காரணத்தை விடுத்துக் கவிதன் கற்பனையால்
 விசேடமாக எண்ணிச் சொல்வது விபாவனையாம். குறிப்பினால் ஆராய்ந்து
 காரணத்தை உணருமாறு அமைப்பது சிறப்புடைத்து. இஃது பிறிதாராய்ச்சியணி
 எனவும் கூறப்பெறும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் தண்டி - 51

    "பாவும் விபாவனை பல்லோர் அறியும் பரிசொழித்து
     மேவும் இயல்பு குறிப்பேது நீங்கி விளைவுரையாம்."            - வீ. 166 

    "மேதக உலகம் விளம்பிய காரணத்து
     ஆதலை விலக்குபு அயல்ஒரு நெறித்தாம்
     ஏதுவில் தன்மையில் குறிப்பின்எய் தியமரபு
     ஓதுதல் விபாவனை எனஉரைத் தனரே."                     - மா. 209 

    "வினைஎதிர் மறுத்துப் பொருள்புலப் படுத்தலும்
     நினைவுறு பொதுவகை யானிபம் விலக்கிக்
     காரியம் புலப்படுத் தலும்எனக் கழறின்
     ஓரிரண் டாகும் உயர்குறிப் பினவே."                        - மா. 210 

    "விபாவனை என்ப விளங்கிய உலக
     சுபாவனை அலத்திறம் தோற்றி இயல்பலே."             - தொ. வி. 358 

    "ஒன்றன் வினையறிந் துரைக்கும் காலை
     உலகறி காரணம் ஒழித்துப் பிறிதொரு
     காரணம் இயல்பினும் குறிப்பினும் புலப்படல்
     விபாவனை என்மனார் மெய்யுணர்ந்த தோரே."        - மு. வீ. பொ. 76 

    "உலகறி காரணம் ஒன்று மின்றிக்
     காரியம் பிறத்தலும் காரணஇயல் தொடர்பு
     இரண்டிலொன் றெஞ்சி இருப்பக் காரியம்
     பிறத்தலும் காரியம் பிறத்தற் காந்தடை
     உள்ள தாக அதுதான் உதித்தலும்
     காரணம் அல்லா மற்றொரு கருத்தால்