அணியியல் - ஒட்டணி

241 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 52, 53

    "வீவில் கவிதான் கருது பொருளை வெளிப்படுத்தற்கு
     ஓவிய மேசுருக் காம்மறை சொல்லின் உரைத்திடினே."          - வீ. 166 

    "குறித்ததை மறைத்துக் குறிக்கொள நிகர்த்ததை
     நுவல்வகை தாமே ஒட்டென நுவல்ப."                         -மா. 124 

    "அதுவே,
     பொருள்இடம் சாதி வினைகுணம் பொழுதொடும்
     மருள்அறு நெறித்தாய் வருதிறன் உடைத்தே."                  - மா.125 

    "ஓட்டெனத் தன்பொருள் உரையாது உவமை
     சுட்டலின் அப்பொருள் தோன்ற இயம்பலே."            - தொ. வி. 344 

    "எண்ணிய பொருள்மறைத் தேயது புலப்பட
     வேறொரு பொருளை விளம்புவது ஒட்டே."            - மு. வீ. பொ. 77 

    "குறித்தொரு பொருளைக் கூறற் குரியது
     மற்றொரு பொருள்மேல் வழங்கல் குறிப்பு
     நவற்சி அணியெண நாட்டினர் புலவர்."                        - ச. 113 

    "ஒருவற் குறித்துரைக் கின்றதை யேமற் றெருவற்குறித்து
     உரைசெயின் பேரும் குறிப்பு நவிற்சி."                        -குவ. 87] 

     கருப்பொருள் நிலனாகப் புலப்பட்டு அடையும் பொருளும் அயல்பட வந்தமைக்கு
 வரலாறு:

    "வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததுஓர் காவிக்
     குறைபடுதேன் வேட்டும் குறுகும்;- நறைமதுச்சேர்ந்து,
     உண்டாடும் தன்முகத்தே, செவ்வி உடையது, ஓர்
     வண்தா மரைபிரிந்த வண்டு"

 என வரும்.

     [களித்த பல வண்டுகள் சேர்ந்து உண்டு நீக்கிவிட்ட ஒரு கருங்குவளைப்
 பூவிலுள்ள குறைபட்ட தேனை விரும்பி, தன்னிடத்து நிறைந்த தேனோடு வனப்பு
 மிக்க வளவிய செந்தாமரையைப்

      31-32