அணியியல் - அதிசயவணி

247 

    "காரியம் முன்னும் காரணம் பின்னும்,
     நிகழப்புனைதல் மிகைஉயர் நவிற்சி."                           -ச. 35 

    "வயமுவ மேய மதைமொழி யாதுவ மானமதை
     நயமுறச் சொல்லி அதைக்காட்டில்அன்னதுஉருவக உயர்வு நவிற்சி."

                                                             - குவ. 22 

    "நுவற்சி பெறும்முன் னையதுஒழிப் போடு நுவலவரில்
     உவப்புறு செந்தமி ழோர்இடு நாமம் ஒழிப்புஉயர்வு நவிற்சி."   - குவ. 23 

    "இதுவேறு எனவும் பிரித்து வருணித் திடல்பலர்க்குப்
     பொதுவா கியதரு மங்களை யாகில் புகலும்பெயர்
     அதுபி ரிநிலை உயர்வு நவிற்."                             - குவ. 24 

    "இயைபின் றியதை இயைபு படுத்தி இசைத்தல்தொடர்பு
     உயர்வு நவிற்சி."                                         - குவ. 25 

    "அடரும் இயைபுள் ளதையியை பின்றி அறையுமது
     தொடர்பில் உயர்வு நவிற்சி."                               - குவ. 26 

    "உறைகா ரணமொடு காரியம் ஓர்பொழு தேஉறுதல்
     முறையில் உயர்வு நவிற்சி."                                 - குவ. 27 

    "வருகா ரணம்உயர் போதேஅக் காரியம் வந்திடுதல்
     விரைவின் உயர்வு நவிற்சி."                                - குவ. 28 

    "அமைகா ரியங்கண் டபின்கர ரணமும்உண் டாகும்அதற்
     குமிகை உயர்வு நவிற்சி என்பார்."                          - குவ. 29] 

     பொருள் அதிசயம் வருமாறு :

    "பண்டு புரம்எரிப்ப, மேல்மேன் படர்ந்து, இன்றும்
     அண்ட முகடு நெருப்புஅறாது ; -- ஓண்தளிர்க்கை
     வில்லி நுதல்மேல் விழி",

 என வரும். நெருப்பு - இடி.