அணியியல் - தற்குறிப்பேற்றவணி

255 

 ஞாபகஏது என்றும் இரண்டாம். அவற்றுள் கருத்தாவும் செயப்படுபொருளும் கருமமும்
 கருவியும் ஏற்பதும் நீக்கமும் என்று சொல்லப்பட்ட இவை ஆறும் காரக ஏதுவாம்.
 அவ்வாறும் அல்லாத பிற காரணங்களால் உய்த்து உணரத்தோன்றுவது ஞாபக
 ஏதுவாம் என்றவாறு.

     நிலனும் பொழுதும் இத்துணைச் சிறப்பு இன்மையின் எடுத்து ஓதார் ஆயினார் ;
 அவையும் காரக ஏதுவாதல் கொள்க.

     [முதல்வன் - கருத்தா -- முதல்வேற்றுமை.

     பொருள் - செயப்படுபொருள் இரண்டாம் வேற்றுமை.

     கருமம் - செய்யப்பட்ட செயல்

     கருவி -- காரணங்களுள் ஒன்று - மூன்றாம் வேற்றுமை.

      ஏற்பது -- நான்காம் வேற்றுமை.

      நிலன் -- பொழுது -- ஏழாம் வேற்றுமை.

     எனவே, ஆறாம் வேற்றுமை எட்டாம் வேற்றுமை நீங்கலான ஏனைய; காரகம்
 ஏதுப்பொருளில் வரும். "முதல்வனும் கருமமும் கருவியும் ஏற்பதும், நீக்கமும் இடமும்
 என இவை காரகம்" என்ற பாடமும் உண்டு.]

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 58, 59, 60

    "ஏது உரைப்பின் இதுஇது வின்விளைவு என்றுரைத்தல்
     ஓதிய காரகம் ஞாபகம் உள்ளதொ டொன்றிறொன்றும்
     ஆதி அபாவம் அழிவுபா டென்று மபாவமின்மை
     தீதில் ஒருங்குடன் தோற்றம்யுத் தாயுத்தம் செப்புவரே."        - வீ. 168