"ஏது என்பது இதனின் இஃது ஆயதென்று
ஓதுவ தாமென உரைத்தனர் புலவர்." - மா. 186
"அதுவே, காரகம் ஞாபகம் எனஇரு காட்சிய." - மா. 187
"அவற்றுள்,
முதலது முதல்வனும் கருவியும் கருமமும்
காலமும் இடனும் கண்ணிய நெறித்தாய்ப்
போக்கறு பொருளொடும் புகல்இரு மூன்றினும்
ஆக்கமும் அழிவுமென்று அமர்தரு விரித்தே," - மா.188
"ஏவல் முதல்வன் இயற்றுதல் முதல்வனென்று
ஆவயின் வருமதல் வனமிரண் டாகும்." - மா. 189
"ஏனைய தொன்றும் வெளிப்பட மற்றது
தான்உணர் விற்புலப் படுந்தன் மையதாய்க்
காரணம் காரியம் தாம்உறழ்ந்து உணர்த்தும்
சால்பினும் நடைபெறும் சாற்றுங் காலே." - மா. 190
"எய்திய இன்பம் துன்பம் இவற்றிற்கு
ஐயமில் பான்மை ஆக்கமும் அழிவும்." - மா. 191
"இருளற அறிவிப் பனவாம் ஏதுவும்
பொருளிடம் வினைபண்பு அவற்றொடும் புணரும்." - மா. 192
"இன்மையும் அதன்கண் எய்துதல் உரித்தே." - மா. 193
"அதுவே, ஒன்றினொன் றி்ன்மை உள்ளதன் இன்மை
என்றுமின் மையினோடு இன்மையின் இன்மை
அழிவுபாட் டின்மையோ ரைந்தா கும்பே." - மா. 194
"காரியம் முந்துற காரகம் காரண
காரியம் ஒருங்குறு காட்சி யுத்தமும்
அயுத்தமும் எனமேல் அறைந்ததோ டொன்றும்." - மா. 195
"உணர்வுறின் ஐய ஏதுவும் உளவே." - மா. 196
"காரியம் அயலதாய்க் கழிதிறன் அசங்கதி." - மா. 203
"அதுவே, சிலேடையின் எய்தும் திறனும் உடைததே." - மா. 204
"ஓதும்ஏ தேனும் ஒருபொருள் திறத்தால்
ஈது விளைந்ததென் றியம்புவது ஏது." - மு. வீ. பொ. 84