[நீண்ட ஆத்திப்பூ மாலையை அணிந்த ஒப்பற்றவனாகிய சோழன் பகைவருடைய கலிங்க நாட்டில் இருந்து தன் வாள் வலிமையால் கைப்பற்றிய யானைக்கூட்டம், மதத்தால் மழையையும், கண்ணால் வெயிலையும், கோட்டால் நிலவையும் சொரியும் - என்ற இப்பாாடலில், மதம் ஒழுகும் கபோலங்கள், கண்கள், கோடுகள் ஆகிய கருவிகள் மாரி, வெயில், நிலவு ஆகிய காரகங்களை வெளிப்படுத்தியவாறு.
"இமிழ்திரைநீர் ஞாலம் இருள்விழுங்கச் சோதி
உமிழ்கதிரும் புள்ளும் ஒடுங்க - அமிழ்தொத்து
அருள்மாலை எய்தா தவர்மனம்போல் மாலும்
மருள்மாலை வந்தென் மனம்"
எனக் காலக் காரக ஏதுவும்,
"சங்கன் அழியாத் தமனியநா டெய்தியதும்
பொங்குபுகழ்த் தாந்தன் புலவீர்காள் -- எங்கோனாம்
சோதிபதம் எய்தியதும் சொற்றமிழ்மா றன்அருள்கூர்
ஆதிநகர்த் தெய்விகத் தால்"
என இடக்காரக ஏதுவும் மாறன் அலங்காரத்தில் எடுத்துக்காட்டால் விளக்கப்பட்டவாறு, - மா. 189]
ஞாபகஏது வருமாறு :
"காதலன்மேல் ஊடல் கரைஇறத்தல் காட்டுமால் ;
மாதர் நுதல்வியர்ப்ப, வாய்துடிப்ப, -- மீது
மருங்குவளை வில்முரிய, வாள்இடுக நீண்ட
கருங்குவளை சேந்த கருத்து"
என வரும். பிறவும் அன்ன. (38)
[இம்மகள் தன் நெற்றியில் வியர்வை துளிப்ப, புருவம் வளைய, வாளைவென்று நீண்ட கருங்குவளை போன்ற கண்கள் செந்நிறம் அடைய இருக்கும் இம்மெய்ப்பாடுகளின் உட்கிடக்கை தன் கணவனிடத்தில் அளவு கடந்த ஊடல் கொண்டுள்ளாள் |
|
|