என வரும்.
[மேன்மக்கள் பொய்மொழியோடு கலவார். பொய்மொழியும் உண்மையையே
கருதும் சான்றோர் மாட்டு அணுகாது. இம்முறையால், பூமாலை அணிந்த தலைவன்
பிரிந்து செல்வானாயின் தன் உயிர்காவலனாகிய தலைவன் கூற்று என்றும் பொய்க்காது
என்ற தெளிவோடு ஆற்றி இல்லிருந்து நல்லறம் செய்தலே உரிமை மகளாகிய
தலைவியின் கடனாகும். என்ற இப்பாடலில், சான்றோர் பொய்மை அணுகார் ;
பொய்யும் சான்றோரை அணுகாது என்ற ஒருபொருளின்கண் ஒருபொருள்
இல்லாமையைக் காரணமாகக்கொண்டு தோழி தலைவியை ஆற்றுவித்தவாறு.
ஒருபொருளின்கண் ஒன்று இல்லாமை - பொய் சான்றோரிடம் இராது;
சான்றோரும் பொய்யினிடம் இரார் என்பது.]