[தலைவன் தலைவி உணருமாறு வேறொரு பெண்ணின்மேல் நகக்குறியிட்டானகத் தலைவி அது பொறாது உயிர்வாடுகிறாள். இருவராகிய இப்பெண்கள் வடிவில் வெவ்வேறாக அமைந்து இருப்பினும் ஓருயிர் உடையார் போலும் - என்ற இப்பாடலில்,
நகக்குறி இடுதலாகிய காரணம் ஓரிடத்து நிகழ அதன் காரியமாகிய உயிர்வாடுதல் பிறிது ஓரிடத்து நிகழ்ந்தவாறு, தலைவி உயிர் வாடுதற்குச் சேய்மையில் தலைவன் பிறள் ஒருத்தியிடம் நிகழ்த்திய செயல் ஏதுவாதலின், இது தூரகாரிய ஏதுவாயிற்று.]
ஒருங்கு உடன் தோற்றஏது வருமாறு ;
"விரிந்த மதிநிலவின் மேம்பாடும், வேட்கை
பிரிந்த சிலைமதவேள போரும், -- பிரிந்தார்
நிறைதளர்வும் ஒக்க நிகழ்ந்தனவால், ஆவி
பொறைதளரும் புன்மாலைப் போது"
என வரும்.
[கிரணங்கள் விரிந்த சந்திரனுடைய ஒளியின் மேம்பாடும், விருப்பத்தை விளைவித்த வில்லேந்திய மன்மதனுடைய போரும், பிரிந்திருப்பவர் உள்ளத்து அடக்கம் தளர்தலும், உயிர் தடுமாறும் அற்பமாகிய மாலைக் காலத்தில் ஒரு சேர நிகழ்ந்தன - என்ற இப்பாடலில்,]
நிலவின் மேம்பாடு, மதவேள் போர் என்ற காரணங்களும் பிரிந்தார் நிறை தளர்வாகிய காரியமும் ஒருசேர நிகழ்ந்தவாறு காண்க. இவ்வாறு காரணமும் ஒரே நேரத்தில் நிகழ்வது ஒருங்குடன் தோற்றமாகும்.]
காரியம் முந்துஉறூஉம் காரண நிலைஏது வருமாறு :
"தம்புரவு பூண்டோர் பிரியத் தனிஇருந்த
வம்புஉலவு கோதையர்க்கு, தாரவேள் -- அம்பு
பொரும்என்று, மெல்ஆகம் புண்கூர்ந்த ; மாலை
வரும்என்று இருண்ட மனம்"
|
|
|