[தம்மைக் காத்தற்றொழிலை மேற்கொண்ட தலைவர் பிரிகையினாலே, தனித்திருக்கும் பண்டு பூமாலை சூடிய பெண்களுக்கு, மன்மதனுடைய அம்புகள் தைக்குமே என்று மெல்லிய மார்பகம் புண்மிக்கன, மாலைக்காலம் வந்துவிடுமே என்று மனம் இருண்டது - என்ற இப்பாடலில், மன்மதன் அம்பு எய்தல், மாலைக்காலம் வருதல் ஆகிய காரணங்களுக்கு முன்பே, மெல் ஆகம் புண்கூர்தல், மனம் இருளுதல் ஆகிய காரியங்கள் நிகழ்ந்தவாறு காண்க.]
உயுத்த ஏது வருமாறு :
"பொன்னி வளநாடன் கைவேல் பொழிநிலவான்,
முன்னர் அசைந்து முகுளிக்கும், -- தன்நேர்
பொரவந்த வேந்தர் புனைகடகச் செங்கை
அரவிந்தம் நூறா யிரம்"
என வரும்.
[சோழ மன்னன் கையிலேந்திய வேல் வெளிப்படுத்திய நிலவினாலே, அவனுக்கு ஒப்பாகக் கருதிப் போரிடற்கு வந்த பகை மன்னருடைய கடகங்கள் அணிந்த கைகளாகிய தாமரைகள் பலவும் அவனை வணங்குவதற்காகக் குவிந்துவிடும் - என்ற இப்பாடலில்,
நிலவின் ஒளியினால் தாமரை மூடிக்கொள்ளுதலாகிய பொருத்தமாகிய உலகியல் செய்தியை அடிப்படையாகக் கொண்டு காரணம் கற்பிக்கப்பட்டவாறு காண்க.
யுத்தம் -- பொருத்தமானது.]
அயுத்த ஏது வருமாறு :
"இகல்மதம்மால் யானை அநபாயன் எங்கோன்
முகம்மதியின் மூரல் -- அகம்மலர்வ,
செங்கயற்கண் நல்லார் திருமருவு வாள்வதன
பங்கயங்கள் சாலப் பல"
|
|
|