[மாறுபாட்டினை உடைய மதம்மிக்க பெரிய யானையை உடைய அநபாயனாகிய
எம் அரசனுடைய முகமாகிய சந்திரனில் இருந்து வெளிப்படும் புன்சிரிப்பாகிய
நிலாவினாலே, பெண்களுடைய அழகு பொருந்திய முகங்களாகிய் தாமரைகள்
மலர்கின்றன - என்ற இப்பாடலில்.]
உலகியல், நிகழ்ச்சிக்குப் பொருத்தமல்லாத - நிலாவெளியினாலே தாமரைகள்
மலரும் - என்ற செய்தி குறிப்பிடப்பட்டு இருத்தல் அயுத்த ஏதுவாம்.
அயுத்தம் -- பொருத்தமில்லாதது. காரணத்திற்கு ஏலாத காரியம் நிகழ்வது.
அஃதாவது நிலவொளியால் கூம்பும் தாமரையை நிலவொளியால்
மலரும் என்பது.]