அணியியல் - நுட்பவணி

269 

    "அறிந்து வேறாய் அறையாது குறிப்பினும்
     தொழிலினும் அரிதுஉணர் தொழில்திறம் நுட்பம்
     ஆகம் என்மனார் அறிந்திசி னோரே."                - மு. வீ. பொ. 85 

    "கருதிய பிறக்கோள் கண்டு குறிநிலைச்
     செங்கையின் நிகழ்தலும் செப்பே நுட்பம்."                     - ச. 110 

    "பிறன்கருத்து ஓர்ந்து கருத்தோடு கூடப் பெறுசெய்கையால்
     உறுவிடை ஈவது நுட்பம்."                              - குவ. அ. 84] 

     குறிப்பினான் வரும் நுட்பம் வருமாறு :

    "காதலன் மெல்உயிர்க்குக் காவல் புரிந்ததால்
     பேதையர் ஆயம் பிரியாத - மாதர்
     படர்இருள்கால் சீக்கும் பகலோனை நோக்கிக்
     குடதிசையை நோக்கும் குறிப்பு"

 என வரும்.

     [மகளிர் ஆயத்தைவிட்டு நீங்காத தலைவி, படர்ந்த இருட்டைப் போக்கிய
 கதிரவனை நோக்கிப் பின் மேற்குத் திசையை நோக்கிய குறிப்பு, தலைவனுடைய
 மென்மையான உயிருக்குப் பாதுகாவலைத் தந்தது - என்ற இப்பாடலில்,

     தொழிலினான் வரும் நுட்பம் வருமாறு :

    "பாடல் பயிலும் பணிமொழிதன் மென்பணைத்தோள்
     கூடல் அவாவால் குறிப்புணர்த்தும் -- ஆடவற்கு,
     மென்தீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
     இன்தீங் குறிஞ்சி இசை"

 என வரும். பிறவும் அன்ன.                                           (41)