"அறிந்து வேறாய் அறையாது குறிப்பினும்
தொழிலினும் அரிதுஉணர் தொழில்திறம் நுட்பம்
ஆகம் என்மனார் அறிந்திசி னோரே." - மு. வீ. பொ. 85
"கருதிய பிறக்கோள் கண்டு குறிநிலைச்
செங்கையின் நிகழ்தலும் செப்பே நுட்பம்." - ச. 110
"பிறன்கருத்து ஓர்ந்து கருத்தோடு கூடப் பெறுசெய்கையால்
உறுவிடை ஈவது நுட்பம்." - குவ. அ. 84]
குறிப்பினான் வரும் நுட்பம் வருமாறு :
"காதலன் மெல்உயிர்க்குக் காவல் புரிந்ததால்
பேதையர் ஆயம் பிரியாத - மாதர்
படர்இருள்கால் சீக்கும் பகலோனை நோக்கிக்
குடதிசையை நோக்கும் குறிப்பு"
என வரும்.
[மகளிர் ஆயத்தைவிட்டு நீங்காத தலைவி, படர்ந்த இருட்டைப் போக்கிய கதிரவனை நோக்கிப் பின் மேற்குத் திசையை நோக்கிய குறிப்பு, தலைவனுடைய மென்மையான உயிருக்குப் பாதுகாவலைத் தந்தது - என்ற இப்பாடலில்,
தொழிலினான் வரும் நுட்பம் வருமாறு :
"பாடல் பயிலும் பணிமொழிதன் மென்பணைத்தோள்
கூடல் அவாவால் குறிப்புணர்த்தும் -- ஆடவற்கு,
மென்தீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
இன்தீங் குறிஞ்சி இசை"
என வரும். பிறவும் அன்ன. (41)
|
|
|