270

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [பாடலை யாழோடு பயின்றுகொண்டிருந்த இனிய பேச்சினை உடைய
 தலைவி, தன் மெல்லிய பருத்த தோள்களைத் தலைவன் கூடுதற்கண் தனக்கு
 உள்ள அவாவினாலே, பகற்குறிக்கண் வந்து நின்ற தலைவனுக்கு, தான் மிழற்றிய
 மெல்லிய இனிய நரப்புக் கட்டினை உடைய யாழில் குறிஞ்சி இசையை வாசித்துத்
 தன் உள்ளக் குறிப்பினைத் தெரிவித்து, பகற்குறியை விலக்கி இரவுக்குறியை
 வேண்டி இப்பாடலில்,

     குறிஞ்சி இசைபாடி அக்குறிஞ்சிக்குரிய இடையாமத்தில் இல்வரை இகவர்
 இரவுக்குறிக்கண் தலைவன் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற தன்
 உள்ளக்கிடக்கையைத் தலைவி தன் யாழ்வாசினையாகிய தொழிலால் தெரிவித்த
 நுட்பம் உணர்த்தப்பட்டவாறு.]                                            41 

இலேசவணி

 661. குறிப்புவெளிப் படுக்கும் சத்துவம் பிறிதின்
     மறைத்து உரையாடல் இலேசம் ஆகும்.

     நிறுத்த முறையானே இஃது இலேசம் என்னும் அலங்காரம் உணர்த்துகின்றது.

     இ-ள் : கருதியது வெளிப்படுக்கும் சத்துவங்களைப் பிறிது ஒன்றினான்
 நிகழ்ந்தனவாக மறைத்துச் சொல்லுவது இலேசம் என்னும் அலங்காரமாம் என்றவாறு :

     சத்துவம் என்பன வெண்பளிங்கில் செந்நூல் கோத்தால், அதன் செம்மை புறம்
 பொசிந்து தோன்றினாற்போல, கருதியது புலன் ஆக்கும் குணங்கள். அவை,
 சொல்தளர்வு, மெய்விதிர்ப்பு, கண்ணீர்நெகிழ்ச்சி, மெய்வெதும்பல், மெய்ம்மயிர்
 அரும்பல் முதலாயின.

     [இது வஞ்சநவிற்சியணி எனவும் கூறப்படும்.]