அணியியல் - ஆர்வமொழியணி

279 

 மதிப்பாலும் பேசத் தொடங்கில் சொற்கள் குழறுகின்றன. நின்னைத் தழுவிக்
 கொள்வோம் என்றால் நின்னைக் கண்ட மகிழ்ச்சியால் தம்வசம் இழந்து தோள்கள்
 நின்னைத் தழுவாமல் செயலற்று இருக்கின்றன. உன் பெருமையை அமைதியாக
 நினைத்து மகிழ்வோம் என்றால் அப்பெருமை முழுதும் நினைக்க மனம் போதிய
 இடப்பரப்பு உடையதன்று - என்ற இப்பாடலில், மனத்திலுள்ள ஆர்வம்
 வெளிப்படுத்தப்பட்டவாறு காண்க.]                                       45 

சுவையணி - இலக்கணமும் திறனும்

 665. உள்நிகழ் தன்மை புறத்துத் தோன்ற
     எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவை ; அது
     வீரம்1 அச்சம்2 இழிப்பொடு3 வியப்பே4
     காமம்5 அவலம்6 உருத்திரம்7 நகை8 என
     இயம்பிப் போந்த இருநான்கு வகைத்தே.

     இது நிறுத்தமுறையானே சுவை என்னும் அலங்காரத்தினது இயல்பும் அதன்
 திறனும் கூறுகின்றது.

     இ-ள் :   உள்நிகழ்தன்மை புறத்துப் புலனாய் விளங்க எண்வகைப்பட்ட
 மெய்ப்பாட்டானும் இயல்வது சுவை என்னும் அலங்காரமாம். அது வீரம்
 முதலியவாகக் கூறிய உண்வகைத்தாம் என்றவாறு :

     "மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே" என்பது "பொன்னின் இயன்ற குடம்"
 என்றாற் போலக் கொள்க ; சுவை வேறு இன்மையின்.

     [பொன்னும் குடமும் அதுவாகுகிளவியான் ஒன்றாமாறு போல மெய்ப்பாடும்
 சுவையும் ஒன்றாகியனவே என்பது, இம்மெய்ப்பாடு அகத்திணையியலில்,