என்ற நூற்பாப் பகுதியானும் போதரும்.
சுவையணி இரதவணி எனவும் பெயர் பெறும்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் (சிறிது திரிபுடன்) - தண்டி. 69. 70
"உரிய சுவைதான் இரதம்." - வீ. 170
"பொறியுணர் வொடும்ஒரு பொருளினை எதிர்ந்த
நெறியுடை மனத்துள் நிகழ்தரும் பான்மை
அயலவர் உறப்புறத் தாய்பொருள் எட்டின்
இயல்வது சுவைஎன்று இயம்பினர் புலவர்." - மா. 179
"அவைதாம்,
பெருமிதம் நடுக்கம் அழுகை இளிவரல்
உருத்திரம் நகைவியப்பு உவகைஎன் றாகும்." - மா. 198
"சுவைஅணி என்ப சுடும்சினம் காமம்
வியப்புஅவலம் இழிபுஅச்சம் வீரம் நகைஎன
மேன்மைப் பாட்டின் இயைவன கூறி
உள்மெய்ப் பாட்டை உணர்ததிக் தோற்றலே." - தொ. வி. 354
"புந்தியின் நிகழ்திறன் புறத்துப் புலனாய்
விளங்க எண்வகை மெய்ப்பாட் டானும்
ஒழுகல் சுவைஎன உரைக்கப் படுமே." - மு. வீ. பொ. 88
"அவைதாம்,
அச்சமும் வீரமும் அவலமும் காமமும்
இழிபும் வியப்பும் எழில்படு நகையும்
உருத்திர மும்மென உரைக்கப் படுமே." - மு. வீ. பொ. 89