அணியியல் - சுவையணி

281 

    "வடிவங்கண் ணோக்கு வெறுப்புமுன் னானடிவ யாலுமுண்டா
     யிடும்விருப் பேமுத லாஞ்சுவை அங்க மென்னவரப்
     படுமது வேசுவை யென்பார்."                           - குவ. அ. 101] 

     வீரச்சுவை வருமாறு:

    "சேர்ந்த புறவின் நிறை, தன் திருமேனி
     ஈர்ந்திட்டு, உயர்துலைதான் ஏறினான் ; -- நேர்ந்த
     கொடைவீர மோ, மெய் நிறைகுறையா வன்கண்
     படைவீர மோ, சென்னி பண்பு?"

 என வரும்.

     [தன்னை அடைக்கலமாக வந்து அடைந்த புறவினைக் காப்பதற்காக அதன் நிறை
 அளவிற்குத் தன் உடல் உறுப்புக்களை அறுத்துக் கொடுத்ததோடு தானும்
 துலாத்தட்டில் ஏறிய சிபி மன்னனுடைய பண்பு கொடை வீரமோ? தன் நிறை
 கறையாமைக்குக் காரணமான தறுகண்மையை உடைய படை வீரமே? - என்ற
 இப்பாடலில், சிபி மன்னன் தன் உடலைத் தானே அரிந்து கொடுத்தற்கேற்ற
 தறுகண்மையும், புறாவுக்காகத் தன்னையே கொடுக்கக்கூடிய கொடையும் உடையனாய்,

    "கல்வி தறுகண் இசைமை கொடைஎனச்
     சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே"                    - தொ. மெ. 9 

 என்று மெய்ப்பாட்டியல் கூறும் வீரத்து நிலைக்களம் நான்கனுள் தறுகண்,
 கொடை என்ற நிலைக்களன் காரணமாகத் தன் வீரத்தை வெளியிட்டவாறு.]

     அச்சச் சுவை வருமாறு :

    "கைஞ்ஞெரித்து, வெய்துயிர்த்து, கால்தளர்ந்து, மெய்பனிப்ப
     மையரிக்கண் நீர்ததும்ப, வாய்புலர்ந்தாள் -- தையல்
     சினவேல் விடலையால், கைஇழந்த செங்கண்
     புனவேழம் மேல்வந்த போது"

 என வரும்.