என வரும். இதன்திறத்து வருவன பிறவற்றிற்கு உதாரணம் அகத்திணையியலுள்
காண்க. 46
தலைவன் பரத்தையிற் பிரிந்துசென்று பின் தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்குப்
பாணனை வாயிலாக விடுத்தானாகப் பாணனுக்கு வாயில் மறுத்த தோழி கூற்று இது.
"தலைவியே ! தன் வீட்டிற்குத் தானே நேரில் வருவது வெட்கப்படத்தக்க செயல்
போலும் ! தலைவன் புறத்தொழுக்கம் உடையனல்லன்" என்று உறுதி கூறி நெருப்பில்
பாய்ந்து தன் உறுதிமொழியை மெய்ப்பிப்பவன் இப்பாணன் போலும் ! தன்
கைகளையே கண்களாகக்கொண்டு இருட்டில் தடவிப் பார்த்துப் பொருள்களைக் களவு
செய்பவன், ஆங்குள்ளாரின் உறக்கம் பற்றி அறியப் பொய்த்தலையை நீட்டியது
போன்றுள்ளது, தலைவனால் முன்னோடியாக அனுப்பப்பட்டுள்ள பாணன் வரவு" -
என்ற இப்பாடலில், தலைவனையும் பாணனையும் எள்ளிநகையாடியவாறு