"மொழிவினை முரணுதல் முரண்வினைச் சிலேடை."
- மா. 152
"இயல்புடையப் பொருள்கட்கு உளதுஇலது இரட்டுதல்
நியமித் துரைத்தல் நியமச் சிலேடை."
- மா. 153
"விளம்பிய நியமம் விலக்குதல் விலக்கே."
- மா. 154
"சாதி முதலாச் சாற்றிய நான்கொடும்
தீதறு பெயரினும் வினையினும் திரிந்து
மேதக விரோதத்து அறைவது விரோதம்."
- மா. 155
"அவிரோ தத்தறை வதுஅவி ரோதம்"
- மா. 156
"சிலேடை என்ப திரிசொல் பலஇணைந்து
இருபய னாக ஒருதொடர்பு உரைத்தலே."
- தொ. வி. 367
"ஒருவகை யாம்தொடர் உரைபல பொருளின்
ஒயல்பு புலப்பட இயம்பல் சிலேடை."
- மு. வீ. பொ. 99
"பல்பொருள் தரூஉம்பல் பதங்கள் புணர்த்துச்
சொல்வது பல்பொருள் சொற்றொடர் அணிஅது
புனைவுளி புனைவிலி இருமைமூ வகைத்தே"
- ச. 51
"தெரியும் பலபொருள் சொற்களின் சேர்க்டிக சிலேடைஅது
வருணிய மேஅ வருணிய மேஇரு மைஎனலாய்
மருவி வரும்."
- குவ. 26]
செம்மொழிச் சிலேடை வருமாறு :
"செங்கரங்க ளான்இரவு நீக்கும்; திறம்பயின்று
பங்கள, மாதர் நலம்பயில, -- பொங்குஉதயத்து
ஓர்அழி வெய்யோன், உயர்ந்த நெறிஓழுகும்,
நீர்ஆழி சூழ்ந்த நிலத்து"
என வரும். ஆதித்தன்மேல் செல்லுங்கால், கரம் - கதிர்; இரவு - இருள்; மாதர் - காதல்; நலம் - அழகு;
பயிறல் - உண்டாதல்; பொங்குதல் - மேல்நோக்கி வளர்தல்; உதயம் - தோற்றம்; ஆழி - தேர்க்கால்; வெய்யோன் - ஆதித்தன்; நெறி - வழி. |
|
|
|