300

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     இனிச் சோழன்மேல் செல்லுங்கால், கரம் - கை; இரவு - இரத்தல்; மாதர் -
 திருடமந்தை; நலம் - செல்வம்; பயிறல் - பெருகுதல்; பொங்குதல் - மேம்படுதல்;
 உதயம் - பொருள் வருவாய்; அழி - சக்கரம்; வெய்யோன் - விருப்பம் உடையோன்;
 நெறி - ஒழுக்கம்.

     [சூரியன் தன் சிவந்த கிரணங்களால் இரவைப் போக்கும்; தாமரை அழகிய
 சிறப்பைப்பெற, மேல்நோக்கி வளரும் தோற்றத்தோடு வானவெளியில் சஞ்சரிக்கும்
 - எனவும்,

     ஆணைச் சக்கரத்தை உடைய சோழன் இவ்வுலகில் தன் சிவந்த கைகளால்
 செய்யும் கொடைத்தொழிலால் இரத்தலை நீக்கி, திருமகளும் கலைமகளும் இவனைச்
 சேர்தலான் சிறப்படைய, சான்றோர் வகுத்த நெறியில் செங்கோல் செலுத்துவான் -
 எனவும் செம்மொழிச் சிலேடைப் பொருள் கொள்க. பங்கயமாதர் - செந்தாமரைத்
 திருவும் வெண்டாமரைக் கலைமகளும்.]

     பிரிமொழிச் சிலேடை வருமாறு :

    "தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய,
     எள்ள அரிமா னிடர்மிகுப்ப, -- உள்வாழ்தேம்
     சிந்தும் தகைமைத்தே, எங்கோன் திருவுள்ளம்
     நந்தும் தொழில்புரிந்தார் நாடு"

 எனவரும். சேழனைப் பகையாதார் நாட்டின்மேல் செல்லுங்கால், தள்ளாவிடம்
 - தவறாத இடம்; ஏர் - உழும் எருது; தடம் - வாவி; தாமரை - பங்கயம்;
 எள்ளாமை - இகழாமை; அரி - நெற்சூடு; மானிடர் - உழவர்; உள்வாழ்தேம் -
 உள்ளே உண்டாகிய தேன்; சிந்தல் - பொழிதல்; நந்தல் - ஆக்கம்.

     பகைத்தார் நாட்டின்மேல் செல்லுங்கால் - தள்ளாவிடத்தேர் - அசையாத
 விடத்தேர்மரம்; தடம் - மலை;