"விச்சா தரன்எனினும் அந்தரத்து மேவானால்;
அச்சுத னேனும்அம் மாயன்அலன்; - நிச்ச
நிறைவான் கலையான் அகளங்கன்; நீதி
இறையான், அநகன்; எங் கோ"
என வரும். விச்சாதரன் - தேவனும் சிலேடை. விச்சாதரன் அந்தரத்தில் மேவுவான்; ஆனால் சோழன் அந்தரத்தில் மேவான். அச்சுதன் மாயன்; ஆனான் சோழன் மாயன் அல்லன். மதியான் களங்கன்; ஆனால் சோழன் அகளங்கன். சிவபெருமான் நகன்; ஆனால் சோழன் அநகன்.
இவ்வாறு சிலேடைப்பொருளான் சோழமன்னன் - விச்சாதரன், திருமால், சந்திரன், சிபெருமான் ஆகியோரின் மாறுபட்டிருப்பதாகக் கூறுதல் காண்.]
அவிரோதச் சிலேடை வருமாறு :
"சோதி இரவி, கரத்தான் இரவு ஒழிக்கும்;
மாதிடத்தான், மன்மதனை மாறழிக்கும்;-மீதா
அநகமதி தோற்றிக் குமுதம் அளிக்கும்;
தநதன், இருநிதிக்கோன் தான்"
என வரும். சோதி - ஒளியும், புகழும்; இரவி - சூரியனும், சோழனும்; கரம் - கதிரும், கையும்; இரவு - இருளும், |
|
|