அணியியல் - சிலேடையணி

307 

 இரத்தலும்; மாதிடத்தான் - சிவனும், மிக்கதிட்பத்தை உடைய சோழனும்; மன்மதன் -
 காமனும், மன்னரது வலியும்; மதி - சந்திரனும், அறிவும்; குமுதம் - ஆம்பலும்,
 மகிழ்ச்சியும்; தனதன் - குபேரனும், தனத்தை உடைய சோழனம்; இருநிதி - சங்கநிதி
 பதுமநிதியும், மிக்க பொருளும்.

     "இயலும்" என்றதனான் இவ்வாறன்றிப் பிற வேறுபாட்டான் வருவனவும்
 கொள்க. அவை வந்துழிக் காண்.                                       (53) 

     [இப்பாடல் சூரியன் முதலாயினாருக்கும் சோழனுக்கும் சிலேடை. இரவியும்
 கரத்தால் இரவு ஒழிக்கும்; சோழனும் அன்னன். சிவபெருமான் மன்தனை மாறு
 அழிக்கும்; சோழனும் மன் மதனை மாறு அழிப்பன். மதிதோன்றிக் குமுதத்தை
 அளிக்கும்; சோழனும் மதிதோற்றிக் இருநிதிக்கோன் - எனச்
 சிலேடைப்பொருளான், மாறுபாடின்றிச் சூரியன், சிவபெருமான், சந்திரன்
 குபேரன் ஆகியோருக்குச் சோழன் ஒப்பாயினமை காண்க.

     பிற விகற்பங்களை மாறனலங்காரத்துள் காண்க.]                        53 

விசேடவணி

 673. குணம்தொழில் முதலிய குறைபடு தன்மையின்
      மேம்பட ஒருபொருள் விளம்புதல் விசேடம்.

     இது நிறுத்தமுறையானே விசேடம் என்னும் அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   குணமும் தொழிலும் பொருளும் சாதியும் உறுப்பும் முதலாயின
 குறைபடுதல் காரணமாக, ஒரு பொருட்கு மேம்பாடு தோன்ற உரைப்பது விசேடம்
 என்னும் அலங்காரமாம் என்றவாறு.