308

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [இது சிறப்பணி எனவும் சிறப்புநிலையணி எனவும் கூறப்பெறும்.

     இது சந்திராலோகம், குவலயானந்தம் இவற்றில் சிறிது வேறுபாட்டுடன்
 விளக்கப்பட்டுள்ளது; பிற்சேர்க்கை காண்க.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 79

     "செல்லும் சிறப்புத் தொழில்குணம் அங்கம் சிதைந்திடினும்
      நல்ல பயன்பட நாட்டல்."                                  - வீ. 173 

     "சாதி குணம் தொழில் பொருள் இடம் உறுப்பென்று
      ஓதிய இருமூன் றினுமுறு குறைபட
      ஏதுவின் அதற்கதற்கு இசைமேம் பாட்டால்
      நீதிகொள் புலவர் நிகழ்த்துதல் விசேடம்."                   - மா. 184 

     "விசேடம் எனக்குறை விளம்பிய வற்றான்
      மேன்மை படப்பொருள் விளக்கிய நெறியே."            - தொ. வி. 359 

     "குணம் தொழில் பொருள்உடல் குலம்முத லாயின
      எச்சங் காரண மாகஓர் பொருட்கு
      மேம்பாடு தோன்ற விளம்பல் விசேடம்."             - மு. வீ. பொ. 95 

     "நிலையின் றாதேசம் நிகழத் தொடுத்தல்
      ஏற்றதோர் பொருள்பல் லிடங்களில் நிற்பக்
      காட்டுதல் சிறிய காரியம் செய்வான்
      தொடங்கிவேறு அருவினை தோற்றுதல் மூன்றா
      நிகழ்வது சிறப்பு நிலையணி என்ப,"
      "சிலகா ரணத்தில் ......... விசேடத்தைத் தேரஅறி
      தலின்......நாமம்......சிறப்பு."                            - குவ. அ. 82] 

      குணக்குறை விசேடம் வருமாறு :

     "கோட்டம் திருப்புருவம் கொள்ளா; அவர்செங்கோல்
      கோட்டம் புரிந்த; கொடைச்சென்னி - நாட்டம்
      சிவந்தன இல்லை; திருந்தார் கலிங்கம்
      சிவந்தன, செந்தீத் தெற"

 என வரும்.