அணியியல் - விசேடவணி

311 

     உறுப்புக்குறை விசேடம் வருமாறு :

    "யானை, இரதம் பரி,ஆள், இவைஇல்லை;
     தானும் அனங்கன்; தனுக்கரும்பு; - தேனார்
     மலர்ஐந்தால் வென்று வடுப்படுத்தான் மாறன்,
     உலகங்கள் மூன்றும் ஒருங்கு"

 என வரும். பிறவும் வந்துழிக்கண் கொள்க.                               (54) 

     [மன்மதனுக்கு யானை, தேர், குதிரை, காலாள் என்ற நால் வகைப் படைகளுள்
 ஒன்றும் இல்லை; தனக்கும் வடிவம் இன்று; அவன் எடுத்த வில்லோ கரும்புவில்;
 அம்புகளோ மலர் அம்புகள்; இந்நிலையில் அவள் மூன்று உலகங்களையும் வென்று
 தன் வெற்றிச் சுவடு, அவ்வுலகில் என்றும் இருக்குமாறு செய்துவிட்டான் - என்ற
 இப்பாடலில்,

     போருக்கு வேண்டிய அங்கங்களாகிய வலியஉடல், நால்வகைப் படைகள்,
 உறுதியான வில், கூர்மையான அம்புகள் முதலியன இல்லாமலேயே மன்மதன்
 மூன்று உலகங்களையும் வென்ற செய்தி கூறப்படுதல் உறுப்புக்
 குறைவிசேடமாதல் அறிக.]                                             54 

ஒப்புமைக்கூட்டவணி - இலக்கணமும் திறனும்

 674. கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்து
     ஒருபொருள் உரைப்பது ஒப்புமைக் கூட்டம்;
     புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே.

     இது நிறுத்தமுறையாேனே ஒப்புமைக்கூட்ட அலங்காரத்தினது பொதுஇயல்பும்
 அதன் திறனும் கூறுகின்றது.

     இ-ள் :   ஒரு பொருளைச் சொல்லுமிடத்துத் தான் கருதிய
 குணம் முதலாயினவற்றான் மிக்கபொருளைக் கூட