312

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 வைத்துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டம் என்னும் அலங்காரமாம். அது
 புகழ்தற்கண்ணும் பழித்தற் கண்ணும் தோன்றும் என்றவாறு.

     [இஃது உடனிலைச் சொல்லணி எனவும் ஒப்புமைக் குழுவணி எனவும்
 கூறுப்பெறும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 80

    "உடனிலைச் சொல்நயந்து,
     சொல்லும் குணமுதல் ஒத்த தொகுத்தல்."                     - வீ. 173 

    "தக்கதோர் பொருளினைச் சாற்றுழி அதுபோல்
     மிக்கபல் பொருள்களை உடன்விளம் புதல்தான்
     ஒப்புமைக் கூட்டம் எனஉரைத் தனரே."                     - மா. 128 

    "உயர்புகழ் பழியவற் றொடுமுறும் அதுவே."                   - மா. 129 

    "ஒப்புமைக் கூட்டம் ஒத்த குணத்தவை
     செப்பித் தன்பொருள் தெரிவுறக் கூறலே."              - தொ. வி. 356 

    "ஒருபொரு ளுரைக்குங் காலகத் தெண்ணிப்
     பொருள்முத லானவை அவற்றின் மிகுபொருள்
     உறவைத் தியம்புவது ஒப்புமைக் கூட்டம்."            - மு. வீ. பொ. 96 

    "புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே."            - மு. வீ. பொ. 97 

    "புனைவுளி புனைவிலி பலவாப் பொதுவியல்பு
     ஒன்றின் முடித்தல் ஒப்புமைக் கூட்டம்."                      - ச. 36 

    "இனமாம் புனைவுளிக் கேனும் புனைவிலிக் கேனும்உறு
     வனவாம் தருமத்தின் ஒற்றுமை ஏய்ஒப் புமைக்குழுவே."   - குவ. அ. 64] 

     புகழ் ஒப்புமைக் கூட்டம் வருமாறு :

    "பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும்,
     தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும், - நாண்தாங்கு
     வண்மைசால் சான்றவரும், காஞ்சி வளம்பதியின்
     உண்மையான், உண்டுஇவ் வுலகு"

 என வரும்.