[மாதே! இவ்வழகிய மாதவிக்கொடி அரும்புகளையும் தளிர்களையும் கொண்டு
மணம் வீசி மாமரத்தின் கிளையினைத் தழுவிக் கவர்ச்சியாகத் தோற்றம்
அளிப்பதற்குப் பண்டைப பிறப்பில் பலவாகிய தவங்கள் செய்தது போலும் ! - என்று
வரைதல் வேட்கையான் தோழியிடம் கூறிய தலைவி கூற்றாக அமையும் இப்பாடலில்,
உயர்குடி மகளாய்ப் பிறந்து வைத்தும், தலைவனைப் பலர் அறிய மணம்
புணர்ந்து பூப்புனைந்து அவனைத் தழுவி வாழும் இல்லறத்தை நல்லறமாக நடத்தும்
வாய்ப்பிற்குரிய நற்றவத்தைத் தலைவி செய்யாமைக்காக இரங்கும் செய்தி குறிப்பால்
பெறப்பட்டவாறு.