அணியியல் - புகழாப் புகழ்ச்சியணி

319 

 தொன்னூல் விளக்கமும் சந்திராலோகமும் குவலயானந்தமும் பழிப்பது போலப்
 புகழ்வதனையும், புகழ்வதுபோலப் பழிப்பதனையும் இவ்வணியுள் அடக்கும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 84

    "மாறி இகழ்மொழி வண்புக ழாய்நுவ லாச்சொல்வரும்."          - வீ. 174 

    "இகழ்வது போன்ற இயற்கையின் வண்புகழ்
     நிகழதர உரைப்பது நிந்தாத் துதியே."
                      - மா. 228 

    "மதித்தொரு பொருளினை வழாஅதுள் ளுறுத்துத்
     துதிப்பது போன்றிகழ் வதுதுதி நிந்தை."
                    - மா. 229 

    "புகழ்மாற்று என்ப புகழ்வதுபோல் இகழ்ந்து
     இகழ்வது போல்புகழ்ந்து இயம்பிய நிலையே."
           - தொ. வி. 348 

    "பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
     புலப்படல் புகழாப் புகழ்ச்சி யாகும்."
               - மூ. வீ. பொ. 100 

    "நிந்தையால் துதியும் துதியால் நிந்தையும்
     வந்துற அமைவது வஞ்சப் புகழ்ச்சி."
                         - ச. 55 

    "நிந்தையி னாற்றுதி யும்துதி யால்நிந்தை யும்பணிக்க
     வந்திடில் வஞ்சப் புகழ்ச்சி."
                           - குவ. அ. 30] 

     வரலாறு :

    "போர்வேலின் வென்றதூஉம், பல்புகழால் போர்த்ததூஉம்,
     தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம், - நீர்நாடன்
     தேர்அடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம், செங்கண்மால்
     ஓர்அடிக்கீழ் வைத்த உலகு"

 என வரும். தேர்அடி - சக்கரம்.

     சோழன் போரிடும் வேலினால்வென்று கைப்பற்றியதும், தன் புகழால்
 மூடி மறையச் செய்ததும், தன் புயவலியால் காப்பதும், தன் ஆணைச்சக்கரத்தால்
 செங்கோல் திருமால்ஒரே அடியால் அளந்த நில வுலகமாகும் - என்ற இப்பாடலில்,