322
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
"இவ்வகைக்கு உலகத்து இவைநிகழ் திறம்எனும் அவ்வகைக்கு அவைபோன்று ஒருபொருள் திறங்களைக் கோட்டமில் குணம்தீங்கு எனும்இரு குறிப்பின் காட்டும் என்றே கழறுதல் நிதரிசனம்." - மா. 139
"ஒருவகை யானொழு குவதொன் றற்குப் பொருந்தின ஒருபயன் வேறொன் றற்கு நன்மை தீமை நாட்டுவது நிதரிசனம்." - மு. வீ. பொ. 101
"வாக்கியம் பதம்பொருள் காட்சிமூ வகைத்தே." - ச. 41
"வாக்கியப் பொருளிரண் டற்கா ரோபம் புனைதல் வாக்கியப் பொருட்காட்சி என்ப." - ச. 42
"ஒன்றன் இயல்மற்று ஒன்றினில் ஏற்றிடல் பதப்பொருள் என்னப் பாத்தனர் புலவர்." - ச. 43
"நற்பொருள் தீப்பொருள் நவிலும்இவ் விரண்டினுள் ஒன்றைச் செய்கையின் உணர்த்தல் பொருளே." - ச. 44
"சொற்றிடொப் பான இருவாக் கியங்களில் தோன்றுபொருட்கு ஒற்றுமை என்பதின் ஆரோபம் காட்சி." - குவ. அ. 19
"நேரும் பதப்பொருள் ஆரோ பமும்முன் நிகழ்த்துவதாம்." - குவ. அ. 19
"தீப்பய னாவது நற்பய னாவது செய்கையினால் வாய்ப்பொடு காணப் புரிவதும் அவ்வணி." - குவ. அ. 19]
நன்மை புலப்பட வரும் நிதரிசன அலங்காரம் வருமாறு :
"பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும் சிறியோர் பொறாத திறமும் - அறிவுறீஇ, செங்கமலம் மெய்மலர்ந்த; தேங்குமுதம் மெய்அசைந்த; பொங்குஓளியோன் வீறுஎய்தும் போது"
என வரும்.