அணியியல் - நிதரிசனவணி

323 

     [பிறர் செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்வர் என்பதனையும் சிறியோர்
 பொறுக்க மாட்டாமல் மனம் புழுங்குவர் என்பதனையும் அறிவுறுத்தி, கதிரவன்
 ஒளியால் அழகுறும்போது தாமரை மலரவும் குமுதமலர்கள் கூம்பின - என்ற
 இப்பாடலில்,

     தாமரை குமுதம் என்ற இவற்றின்கண் இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி உலக
 மக்களுக்குச் சான்றோர், கீழோர் ஆகியவர் திறத்தை அறிவிப்பதாகக் கூறப்பட்டமை
 காண்க.

     பிறர் செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்தலைப் பொங்கு ஒளியோன் வீறு
 எய்தும்போது செங்கமலம் மெய்மலர்ந்து அறிவுறுத்தது என்பது நற்பொருள்
 காட்சியாம்.]

     தீமைபுலப்படவரும் நிதரிசன அலங்காரம் வருமாறு :

    "பெரியோர் உழையும் பிழைசிறிது உண்டுஆயின்,
     இருநிலத்தில் யாரும் அறிதல் - தெரிவிக்கும்,
     தேக்கும் கடல்உலகில் யாவர்க்கும் தெள்அமுதம்
     வாக்கும் மதிமேல் மறு"

 என வரும்.                                                         (59) 

     [பெரியவர்களிடமும் சிறிதளவு மாசு ஏற்படுமாயின் உலகிலுள்ள எல்லோராலும்
 அறியப்படும் என்ற செய்தியை, கடல் சூழ்ந்த உலகில் யாவருக்கும் அமுத
 கிரணங்களை வழங்கும் முழுமதியின்கண் உள்ள களங்கம் தெரிவிக்கின்றது
 - என்ற இப்பாடலில்,

     பல நற்பண்பு உடையாரிடத்து ஒரு தீப்பண்பு இருப்பின் அதனையே உலகம்
 தூற்றும் என்ற நிகழ்ச்சி சந்திரனிடத் துள்ள மறுவினால் போதருகிறது என்ற செய்தி
 தீப்பொருட்காட்சியாமாறு காண்க.]                                        59