324

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

புணர்நிலையணி

 679. வினைபண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே
      புணர மொழிவது புணர்நிலை ஆகும்".

     இது நிறுத்தமுறையானே புணர்நிலை அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   வினையானும் பண்பானும் இரண்டு பொருளுக்கு ஒன்றே பொருந்தச்
 சொல்வது புணர்நிலை என்னும் அலங்காரமாம் என்றவாறு,

     ஒன்றே மொழிவது என்று ஒழியாது "புணர மொழி வது" என்ற மிகையானே,
 இவ்வலங்காரம் ஒருவினை ஒடுச்சொல் பொருள்படவே வருதல் கொள்க.

     [இவ்வணி ஒருங்கியல் எனவும், உடன் நிகழ்ச்சியணி எனவும், உடன் நவிற்சியணி
 எனவும் கூறப்பெறும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 86

    "துப்பார் ஒருங்கியல் தூய வினைபண்பு இரண்டுபொருட்கு
     ஒப்பா ஒரு சொல்லு வைப்பது."                             - வி. 175 

    "நன்றிகொள் பண்பு வினைஇவை காலத்து
     ஒன்ற இருபொருட்கு உரைப்பது புணர்நிலை."                - மா. 206 

    "விழுமிய வினையினும் குணத்தினும் இருபொருட்கு
     ஒருபுணர் புணர்ப்பது புணர்நிலை யாகும்."            - மு. வீ. பொ. 102 

    "சீரியோர் உள்மகிழ் செயும் உடன் நிகழ்வை
     உரைப்பது தனைஉடன் நிகழ்ச்சி என்ப."                       - ச. 46 

    "உணர்ந்தோர் உவக்க உடன்நிகழ்வு ஓதல் உடன்நவிற்சி." -  குவ. அ. 21]