உயிர், மாலைப்போது என்ற இரண்டும் "நீண்டன" என்ற ஒரே பண்புச்சொல்லைக்
கொண்டு முடிந்து பொருள் தந்தவாறு காண்க. மாலைநீண்டது என்பது -
மாலைப்பொழுதின் ஒவ்வொரு கணமும் ஊழிபோலத் தோன்றியது என்பதாம். உயிர்
நீண்டது என்பது - பிரிதல் துன்பம் தாங்காது உடலைவிட்டுப் போதலை ஒழித்துத்
தலைவிக்குத் துயரம் செய்து ஒவ்வொரு கணமும் ஊழிபோலக்காட்டி உடலில் உயிர்
தடுமாறிக் கொண்டிருந்தது என்பது.] 60